திருப்பூர் மாவட்டம்
பொள்ளி காளிபாளையம்.
அரசு உயர்நிலைப் பள்ளியில்
3/9/2024 செவ்வாய்க்கிழமை
நடந்த நிகழ்வு
பூமியை நலமுடன்
கவனித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பெற்றோரால் உங்களுக்கு வழங்கப்படவில்லை, உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடனாக கொடுத்துள்ளனர். நமது மூதாதையரிடம் இருந்து, நாம் பூமியை பெறவில்லை, நமது குழந்தைகளிடம் கடன் வாங்கியுள்ளோம் இந்த பழமொழியை உணர்த்து மழலையும் மரமும் செயல் திட்டம் தொடங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கும் 1600 நர்சரி கவர் மற்றும் மருதம் .பூவரசு மரங்களின் விதைகள் 1800 வழங்கப்பட்டது. விதைநேர்த்தி செய்து நடவு செய்யும் . நடைமுறை விளக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில்
வேப்பன்
மருதம்
செந்தூரம்
வாகை
நாவல்
நெல்லி
கடுக்காய்
தான்றிக்காய்
நாவல்
பலா
குமிழ் தேக்கு
புங்கன்
கொய்யா ஆகிய மரங்கள் 50 பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் அறக்கட்டளை நண்பர்கள் நடவு செய்தனர்
ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் பூக்கள் அறக்கட்டளையின் சார்பாக நன்றி


.jpeg)

.jpeg)

.jpeg)

கருத்துகள்
கருத்துரையிடுக